search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு ஆலை வெடி விபத்து"

    சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.

    அந்த மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.

    இந்த ஆலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. அப்போது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டியராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன்குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

    மேலும், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் நேற்று அறிவித்தார்.

    இந்நிலையில், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்பெனியின் ஊழியர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #BhilaiSteelPlant  #BhilaiSteelPlantblast
    சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.

    அந்த மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.

    இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றபோது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 19 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

    சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டிய ராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன் குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

    இந்நிலையில், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #BhilaiSteelPlant  #BhilaiSteelPlantblast
    சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டம் பிலாய் நகரில் மாநில அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை இயங்கி வருகிறது. நவீனமாயமாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட இந்த ஆலையை கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    இந்திய ரெயில்வே துறைக்கு உலகத்தரம் வாய்ந்த ரெயில் தண்டவாளங் களை தயாரித்து வழங்கும் பணியை இந்த ஆலை மேற்கொண்டு வருகிறது.



    இந்த நிலையில், பிலாய் இரும்பு ஆலையில் நேற்று காலை வழக்கமான உற்பத்தி பணிகள் நடந்துகொண்டிருந்தன. ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 11 மணி அளவில் சற்றும் எதிர்பாரத வகையில் ஆலையில் உள்ள கியாஸ் குழாயில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஆலைக்குள் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியேறினர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 12 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 10 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast

    ×