search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா எரிமலை வெடிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது.
    • மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவசரமாக திரும்பினர். மொத்தம் 75 மலையேற்ற வீரர்கள் அங்கு சென்றிருந்திருந்தனர்.

    அவர்களில் 46 பேர் கீழே இறங்கி வந்துவிட்டனர். மற்றவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இதில் 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் 12 பேரும் பலியானது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.

    • எரிமலை வெடிப்பில் சிக்கி மேலும் 22 மலையேற்ற வீரர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.
    • அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணம் அகம் பகுதியில் மராபி என்ற மலை அமைந்துள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு மலையேற்ற வீரர்கள் பலரும் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம்.

    அதன்படி நேற்று 75-க்கும் மேற்பட்ட வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த மலையின் 9,800 அடி உயரத்தில் சக்திவாய்ந்த எரிமலை உள்ளது.

    இந்த எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் புஸ்வாணம் போல வானத்தை நோக்கி தீக்குழம்பு வெளியேறியது. இதனையடுத்து இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் டன்கணக்கில் அருகில் உள்ள கிராமங்களை மூடியது.

    இதனால் அந்த கிராமங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதற்கிைடயே மலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இதில் சுமார் 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    எனினும் இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்த 11 மலையேற்ற வீரர்களின் உடல்கள் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. 8 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி மேலும் 22 மலையேற்ற வீரர்கள் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ×