search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்மீனியா பாராளுமன்ற தேர்தல்"

    ஆர்மீனியாவில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நிகோல் பஷின்யானின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். #ArmeniaElection #NikolPashinian
    யெரேவன்:

    முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு ஆர்மீனியா. இங்கு 30 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ரஷியாவின் பாதுகாப்புடன் இந்த நாடு செயல்படுகிறது. எனவே அதன் நெருங்கிய நட்பு நாடாக இது திகழ்கிறது.

    இங்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிபராக இருந்த சாக்ஷியானை புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்துவிட்டு நிகோல் பஷின்யான் பிரதமரானார்.

    இந்தநிலையில் அங்கு நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பிரதமர் நிகோல் பஷின்யானின் கட்சி அமோக வெற்றிபெற்றது.

    தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 70 சதவீதம் வாக்குகளை நிகோல் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

    இவர் பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். ஏப்ரலில் அமைதியான முறையில் புரட்சி நடத்தி ஆட்சியை பிடித்தார்.  #ArmeniaElection #NikolPashinian
    ×