search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வதன விநாயக பூஜை"

    • பூஜை முடியும் நாளில் “மோதகம்” நிவேதனம் செய்ய வேண்டும்.
    • இந்த பூஜையை சங்கடஹரசதுர்த்தியில் தொடங்கலாம்.

    சக்தி கொண்டு சித்தி தரும் இவ்விநாயகரை வழிபட பூஜை முறை ஒன்றிருக்கிறது.

    ஒரு அட்டையிலோ, பலகையிலோ இந்த அஸ்வதன விநாயகரை ஒட்டி, சட்டமிட்டு பக்தர்கள் கோரிக்கைக்கு ஏற்றவாரு பூஜை செய்யலாம்.

    அதற்குரிய சந்த வரிசைகள் இவையே:

    இழந்த பதவி, வேலைகளை மீண்டும் பெற விநாயகர் படத்தில் இடது காதுப்பகுதியிலிருந்து சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு வர வேண்டும்.

    மேலும் விநாயகரின் காரிய சித்தி மாலையை மும்முறை படிக்க வேண்டும்.

    இப்படி 54 நாள்கள் படித்து வர நினைத்த கோரிக்கை நிறைவேறும் தினமும் கல்கண்டு, பால் நிவேதித்து,

    பூஜை முடியும் நாளில் "மோதகம்" நிவேதனம் செய்ய வேண்டும்.

    குழந்தைப் பேற்றுக்காக 48 நாள் தொப்புள் பகுதியில் தொடங்கி சந்தனப்பொட்டு இட வேண்டும்.

    தினமும் த்ரிமதுரம் (தேன், பால், நெய்) கலந்து நிவேதனம் செய்து சாப்பிட்டு வர பலன்கள் கிடைக்கும்.

    இந்த பூஜையை சங்கடஹரசதுர்த்தியில் தொடங்கலாம்.

    சிலருக்கு அதிர்ஷ்டம், ராஜயோகம் வேண்டுதலாக இருந்தால், அதற்கு கணேசருடைய கவசத்தை தினமும்

    மூன்றுமுறை படித்து "மோதகம்" நிவேதனம் செய்ய வேண்டும்.

    "ஓம் கம் கம் கணேசாய நம!" என்று ஜபம் செய்ய வேண்டும்.

    மேலும், பகையின்றி வெற்றி, அரசியல், லாபம் பெறுவதற்கு முஷ்டி மோதகம் என்னும் பிடிக் கொலுக்கட்டை வைத்து

    சுக்கில சதுர்த்தியில் வலது கை இலைப்பகுதியில் தொடங்கி 56 நாட்கள்

    "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கணேஸ்வராய நமக" என்று தினம் 108 தடவை ஜபிக்க வேண்டும்.

    இப்படியாக அஸ்வதன விநாயக பூஜையை எளிமையாசச் செய்து சாதகமான பலன்களை ஏராளமாகப் பெறலாம்.

    ×