search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனந்தபுரி விரைவு ரெயில்"

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி விரைவு ரெயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால், மாற்று எஞ்சின் பொறுத்தப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டுள்ளது.
    கொல்லம்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை கொல்லத்தில் இருந்து ரெயில் புறப்படும் போது எஞ்சின் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே விரைந்து செயல்பட்ட ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

    மாற்று டீசல் எஞ்சின் பொறுத்தப்பட்டு ரெயில் 2 மணி நேரம் தாமதாமாக புறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில் 2 மணிநேரம் தாமதமாக வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×