search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YS Sarmila"

    • ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா டெல்லியில் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
    • தெலுங்கானா முதல் மந்திரிக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.சர்மிளா கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பாசனத்திட்டமான கேஎல்சி அல்லது காலீஸ்வரம் மேல்நோக்கு பாசனத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதை வெளிச்சத்திற்கு கொண்டுவர டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இந்த திட்டத்தில் நடைபெற்றிருக்கும் மிகப்பெரிய ஊழலையும், இந்த விவகாரத்தில் எங்களின் இரண்டாண்டு கால போராட்டத்தையும் இந்த பேரணி வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இந்தத் திட்டத்திற்கான மதிப்பு ரூ. 38,500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது ரூ.1.20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், இதன்மூலம் 1.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று அமைச்சர் நியாயப்படுத்துகிறார். இந்த திட்டம் ஒரு மாபெரும் தோல்வி என்பதையே இது காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பாசனத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி வரும் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, இதைக் கண்டித்து டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது போலீசார் சர்மிளாவையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்தனர். கைதாகி வாகனத்தில் ஏறும்போது அவரும், தொண்டர்களும், கேசிஆர் (தெலுங்கானா முதல் மந்திரி கே.சந்திரசேகரராவ்) டவுன் டவுன் என முழக்கங்களை எழுப்பினர்.

    ×