என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Mental Health"

    • உலக மனநல வார விழா வை முன்னிட்டு புதுவை மணகுள விநாயகர் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனையும், மனநல செவிலியர் துறையும், செவிலியர் கல்லூரியும், மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல வாரவிழா கொண்டாடியது.
    • மனநலத்துறை உதவி பேராசிரியர் சுகன்யா தேவி வரவேற்றார். மனநலத்துறை தலைவர் அருண் இந்த வருட மைய கருத்தை எடுத்துரைத்தார்.

    புதுச்சேரி:

    உலக மனநல வார விழா வை முன்னிட்டு புதுவை மணகுள விநாயகர் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனையும், மனநல செவிலியர் துறையும், செவிலியர் கல்லூரியும், மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல வாரவிழா கொண்டாடியது.

    இதன் நிறைவு விழா நடைபெற்றது. மணகுள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைதலைவர் சுகுமாறன், செயலாளார் டாக்டர் நாராயணசாமி கேசவன், மருத்துவகல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் (அகாடமிக்) கார்த்திகேயன் டீன் (ஆராய்ச்சி) கலைச்செல்வன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாஷ், மனநலத்துறை தலைவர் அருண் ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மனநலத்துறை உதவி பேராசிரியர் சுகன்யா தேவி வரவேற்றார். மனநலத்துறை தலைவர் அருண் இந்த வருட மைய கருத்தை எடுத்துரைத்தார்.

    சுவரொட்டி போட்டி, பேச்சு போட்டி, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் நாராயணசாமி கேசவன் பரிசு வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர் சபரி ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். செவிலியர் மனநலத்துறை உதவி பேராசிரியர் நதியா நன்றி கூறினார்.

    • புதுவை மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநலத் துறையும் செவிலியர் கல்லூரியின் மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல தினம் கொண்டாடியது.
    • இவ்விழாவின் ஒரு பகுதியாக மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    உலக மனநல வார விழாவை முன்னிட்டு புதுவை மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநலத் துறையும் செவிலியர் கல்லூரியின் மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல தினம் கொண்டாடியது.

    தொடக்க விழாவை மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத் தலைவர் சுகுமாறன் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மருத்துவ கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன் துணை இயக்குனர் காக்னே, டீன் (அகடாமிக்) கார்த்திகேயன், டீன் (ஆராய்ச்சி) கலைசெல்வன் மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் மனநல துறை தலைவர் அருண் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்கள்.

    இவ்விழாவின் ஒரு பகுதியாக மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டாக்டர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மனநலத்தின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பி மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

    ×