search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women rescue"

    சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கிய 5 பெண்கள் மீட்கப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு தங்கி இருந்த பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 5 பேர் பயந்து போய் கழிவறையில் பதுங்கினார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் விடுதி உரிமையாளர் மகேஷ் விரைந்து சென்று அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே தீயணைப்பு வீரர்களும், அங்கு விரைந்து சென்றனர். விருகம்பாக்கம் நிலைய அதிகாரி ஆரிபா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்துக்கு பிறகு ரஞ்சிதா, வித்யா, கவிதா, பவித்ரா, அய்னா, ஆகிய 5 பெண்களை மீட்டனர்.

    காயம் அடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் 12 பேர் கடுமையான போராட்டத்துக்கு பிறகே 5 பெண்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களின் துரித நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அதிகாரி ஆரிபா உள்ளிட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
    ×