என் மலர்
நீங்கள் தேடியது "woman fell down death"
திருப்போரூர், டிச. 28-
கேளம்பாக்கம் அருகே உள்ள நாவலூரை அடுத்த தாழம்பூர் ஊராட்சியில் 29 மாடிகள் கொண்ட ராணுவ குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், அவரது மனைவி ஷீலாதேவி (வயது 20) ஆகியோர் அங்கு தங்கி வேலை பார்த்து வந்தனர்.
நேற்று மாலை வழக்கம் போல் இருவரும் வெவ்வேறு தளங்களில் வேலை பார்த்து கொண்டு இருந்தனர். சுமார் 4 மணி அளவில் 19-வது மாடியில் இருந்த ஷீலாதேவி திடீரென கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.
19-வது மாடியில் இருந்து ஷீலாதேவி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை தள்ளிவிட்டு கொலை செய்தனரா? என்று பல் வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த காவலாளி, பணியில் இருந்த போது மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






