search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman cellphone theft"

    சேலம் அண்ணா பூங்கா அருகே இளம்பெண் ஒருவர் செல்போன் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் அருகே நேற்று மாலையில் இளம்பெண் ஒருவர், செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணின் மீது மோதுவது போல் வந்து செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால், அந்த பெண் செல்போனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

    உடனே 2 வாலிபர்களும் அந்த பெண்ணின் கண்ணத்தில் பளார், பளார் என அடித்து உதைத்து செல்போனை பறித்தனர். இதில் அந்த பெண் நிலைதடுமாறி கீழே விழ முயன்றார்.

    இதை பார்த்து பொதுமக்கள் அங்கு திரளுவதற்குள், 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். செல்போனை பறிகொடுத்த பெண் அழுது கொண்டே இருந்தார். அவருக்கு பொதுமக்கள் ஆறுதல் கூறினார்கள்.

    சமீபகாலமாக பெரியார் மேம்பாலம் அருகே அடிக்கடி வழிப்பறிகளும், கொள்ளை சம்பவங்களும் நடக்கிறது. வலம் வரும் கொள்ளையர்கள் பெரியார் மேம்பாலம் அருகே கடைகள், காந்தி விளையாட்டு மைதானம், பூங்கா இருப்பதால் காதல் ஜோடிகள், பொதுமக்கள் தினமும் அதிக அளவில் கூடுவார்கள். கொள்ளை கும்பலின் பார்வை தற்போது இந்த பகுதியின் மீது விழுந்திருக்கிறது. அந்த பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறிப்பாக பெண்களை குறி வைத்து வழிப்பறி செய்கிறார்கள். இதனால் பெண்கள் பீதியில் உள்ளனர். அவர்களை மாநகர போலீசார் கமி‌ஷனர் சங்கர் கண்டுபிடித்து களையெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×