search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water is Needed"

    • ஆச்சாள்புரம் அரசு பள்ளியில் உலகதண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • பேரணியில் பொதுமக்களிடம் தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் எடுத்து கூறினர்.

    சீர்காழி:

    தண்ணீர் தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலம் மாணவிகள் சீர்காழி ஆச்சாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் மாணவிகள் இந்த பேரணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் துரை பேரணிக்கு தலைமை தாங்கினார்.

    பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த பேரணியில் பொதுமக்களிடம் தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப் பட்டது.

    ×