என் மலர்
நீங்கள் தேடியது "Wage worker killed"
கடலூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே தென்னம்பாக்கம் காலனி சேர்ந்தவர் சங்கர் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஒரு புறம் சுவர் திடீரென்று இடிந்து சங்கர் மீது பலத்த சத்தத்துடன் விழுந்தது.
அப்போது வீட்டில் இருந்த சங்கரின் மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அலறி அடித்துக்கொண்டு, சங்கர் மீது விழுந்த சுவர்களை உடனடியாக அகற்றினர். ஆனால் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினரும் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






