என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "V.P. Ramalingam MLA"

    • புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான மானிய கோரிக்கையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் பேசியதாவது:-
    • புதுவை மாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஐ.டி. பார்க் அறிவிப்பு விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான மானிய கோரிக்கையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் பேசியதாவது:-

    புதுவையில தமிழ் மாநாடு நடத்துவது தமிழறிஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. புதுவை மாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஐ.டி. பார்க் அறிவிப்பு விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும்.

    திருக்காஞ்சி புஷ்கர ணிக்கு வருகிற பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அட்டவணை இன பெண்களுக்கு இலவச பஸ் என்பதை மாற்றி அனைத்து பெண்களும் 4 பிராந்தியங்களிலும் உள்ள அரசு பஸ்களில் செல்ல திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆகியவை மகளிரை உற்காகமடைய செய்துள்ளது.முதல்-அமைச்சர் அறிவித்த அறிவி ப்புகள் அனைத்தும் பொது மக்களால மகிழ்ச்சியுடன் ஏற்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு மிக சிறந்த பட்ஜெட்டை அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வ.உ. சிதம்ப ரம்பிள்ளையை கவுரப்படுத்தும் வகையில் அவரது சிலைக்கு நிழற்குடை அமைத்தும், மின் விளக்குகள் அமைத்தும் சிலை உள்ள சதுக்கத்தை அழகுப்படுத்த வேண்டும்.
    • இந்த நிதியாண்டில் இவ்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துக்கென்று தனியாக நிதியை ஒதுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்சபையில் மானிய கோரிக்கை விவாதத்தில் வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாள் ஆண்டிலேயே, சட்டசபை எதிரே உள்ள அவரது சிலைக்கு நிழற்குடை அமைத்தும், அதன் வளாகத்தை அழகுபடுத்தவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு அது பொதுப்பணித் துறை வரை சென்று நிலுவையில் உள்ளது.

    எனவே வ.உ. சிதம்ப ரம்பிள்ளையை கவுரப்படுத்தும் வகையில் அவரது சிலைக்கு நிழற்குடை அமைத்தும், மின் விளக்குகள் அமைத்தும் சிலை உள்ள சதுக்கத்தை அழகுப்படுத்த வேண்டும்.

    மேலும் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 3 வருடங்களாக சரிவர சம்பளம் வழங்கப்பட வில்லை. 9 மாத சம்பளம் தரப்படாமல் உள்ளது. காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலமாக பொதுமக்களுக்கு மானியம் வழங்கும் சிறப்பாக செயல்பட்டு 2 முறை மத்திய அரசின் விருதினை பெற்று தந்து புதுவைக்கு பெருமை சேர்த்துள்ளது.

    எனவே இந்த நிதியாண்டில் இவ்வாரி யத்தில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு சம்பளத்துக்கென்று தனியாக நிதியை ஒதுக்க வேண்டும். அதோடு இங்கு பணிபுரியும் தினக்கூலி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் 15 வருடத்திற்கு மேலாக பணி புரிந்தும், பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார, வாசவி, விஷ்ணு, பார்ப்புகழ், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சேவை வாரமாக பாரதிய ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. மற்றும் புதுச்சேரி மாநில இளைஞரணி தலைவர் கோவிந்தன் வழிகாட்டு தலின்படி புதுச்சேரி நகர மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகுரு தலைமையில் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சுத்தம் செய்தனர். சப்தகிரி வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநிலத் துணைத் தலைவர் செல்வம், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் இளங்கோவன் , முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருச்சந்திரன், சம்பத், குமார், அங்கு தாஸ், மாரியப்பன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் அமல்ராஜ் ,நகர மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்த, கண்ணன், செயலாளர்கள் விஜய ராஜேஷ், அற்புத அழகன், தொகுதி தலைவர்கள் சக்திவேல், நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் பத்மாவதி, மற்றும் சமூக வலைதள பிரிவு திரு பிரவீன் குமார், நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல், நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார, வாசவி, விஷ்ணு, பார்ப்புகழ், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×