search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "velliangiri hill"

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
    • மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்குள்ள 7 மலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் சுயம்புலிங்கத்தை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.

    இங்கு மலையேறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மலையேற சிரமமாக இருக்கும் என்பதால் மலையேறுபவர்கள் கையில் கம்பை ஊன்றியபடியே செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    இவ்வாறு வெள்ளியங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாதத்தில் மட்டும் 5 பக்தர்கள் பலியானார்கள். ஏற்கனவே அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருந்து மலையேறும் போது உடல்நிலை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இறந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மலையேற அனுமதித்து வருகிறார்கள். இதயநோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதற்காக மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் மரணம் அடைந்தார். சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ரகுராம் (வயது 50). தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.

    இவரும், அவரது பகுதியில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து ஒரு வேன் மூலம் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவை மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகுராமின் உடல் பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே 5 பேர் இறந்தநிலையில் நேற்று ரகுராமும் மரணம் அடைந்ததால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பூண்டி வனத்துறை சோதனைச்சாவடி முன்பாக இருந்த சாலை நடுப்புற தடுப்புகளை அகற்றினர்.
    • வழியில் இருக்கும் 6 மலையோர பகுதிகளிலும் தற்காலிக கடைகள் நிறுவும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் பூண்டியையொட்டி அமை ந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் 7-வது மலை உச்சியில் தென்கயிலை என போற்றப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் ஆண்டுதோறும் கோடை க்காலம் தொடங்கியதும் கூட்டமாக வந்திருந்து படிப்படியாக மலையேறி சென்று, பின்னர் மலைஉச்சியில் வீற்றிருக்கும் சுவாமியை தரிசனம் செய்து செல்வதை பெரும்பாக்கியமாக கருதுகின்றனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதை முன்னிட்டு சிவபக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி செல்தற்காக பூண்டி மலைஅடிவாரத்துக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களை வனத்துறையினர் நடுவழியில் தடுத்து நிறுத்தினர். மேலும் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல அனுமதி மறுத்து ஊருக்குள் மறுபடியும் திருப்பி அனுப்பினர். இது மலையேற ஆர்வமாக வந்திருந்த பக்தர்களை ஏமாற்றம் அடைய செய்தது. தொட ர்ந்து அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்கிடையே சரவணம்பட்டியை சேர்ந்த நாக ராஜன் என்பவர் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி மஞ்சுளா, ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களை அனுமதிக்க வேண் டும் என வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பூண்டி வனத்துறை சோதனைச்சாவடி முன்பாக இருந்த சாலை நடுப்புற தடுப்புகளை அகற்றினர்.

    தொடர்ந்து மலையேற்றத்துக்காக வந்திருந்த பக்தர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் உள்ளதா? என்று சோதனைக்கு உட்ப டுத்தினர். அப்போது ஒரு சிலரிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் உணவுப்பொருட்களை பேப்பரில் மடித்து பக்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு மலையேற வசதியாக நீண்ட கம்புகள் வழங்கப்பட்டன.

    வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம்-கூட்டமாக செல்ல வேண் டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி பக்தர்கள் கூட்ட மாக மலையேறி வருகின்ற னர். மேலும் பக்தர்கள் செல்லும்வழியில் பாது காப்பு மற்றும் ரோந்து ப்பணிகள் தீவிரப்படுத்த ப்பட்டு உள்ளன. மார்ச் 8-ந்தேதி மகாசிவராத்திரி வருவதால் அன்றைய தினம் பக்தர்கள் அதிகளவில் திரண்டுவருவர் என்பதால், மலையேற்ற பகுதியில் பாது காப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்ப ட்டு உள்ளன.

    மேலும் வெள்ளியங்கரி மலைக்கு வரும் பக்தர்களை பாதுகாப்புடன் வழிநடத்தும் வகையில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக தன்னார்வலர்களை ஏற்பாடு செய்யும் பணியும் நடக்கிறது. இதுதவிர மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கண்காணிப்பு கூரை அமைத்தல், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளும் வனத்துறை சார்பில் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வந்திருக்கும் பக்தர்கள் தேநீர் அருந்தவும், சாப்பாடு வாங்கி செல்லவும் ஏதுவாக, வழியில் இருக்கும் 6 மலையோர பகுதிகளிலும் தற்காலிக கடைகள் நிறுவும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வருகிற 1-ந்தேதி முதல் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி என்ற இடத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ் பெற்ற இந்த கோவில் அருகே உள்ள மலையில் ஏறினால் 7-வது மலையில் லிங்கத்தை தரிசிக்கலாம். தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.

    7-வது மலைக்கு செல்ல, மலை மீது அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும். அத்துடன் இங்கு திடீரென்று காலநிலை மாற்றமும் ஏற்படும். இதனால் மலைமீது செல்ல குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் முதல் மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து மலை மீது ஏறி அங்குள்ள லிங்கத்தை தரிசித்தனர். கேரளாவில் அடுத்த மாதம் (ஜூன்) முதல் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு மழை தொடங்கிவிட்டால், வெள்ளியங்கிரி மலைப்பகுதியிலும் மழை பெய்யும்.

    எனவே அங்கு காலநிலை மாற்றம் ஏற்பட்டு அடிக்கடி காற்று சுழன்று வீசும். அத்துடன் திடீரென்று உடலை உறைய வைக்கும் அளவுக்கு குளிர்காற்று வீசும். செந்நாய், கழுதைப்புலி, கரடிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே வருகிற 1-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வெள்ளியங்கிரி மலைக்கு கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்று லிங்கத்தை தரிசித்து விட்டு திரும்பினார்கள். ஜூன் மாதம் தொடங்கியதும் அங்கு காலநிலை மாற்றம் ஏற்படும். எனவே வருகிற 1-ந் தேதி முதல் மலை மீது பக்தர்கள் செல்வதை தடுக்க பூண்டி கோவிலில் மலை மீது செல்லும் பாதையில் இருக்கும் கேட் மூடப்படும். அதன் அருகில் உள்ள பாதை வழியாக மலைமீது செல்வதை தடுக்க அங்கும் தடுப்பு வசதி செய்யப்படும்.

    இதுதவிர வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவில் உள்ளவர்களும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள். இந்த கண்காணிப்பையும் மீறி 1-ந் தேதிக்கு பிறகு வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மீது வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ×