என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veleesrar Temple"

    • கோவில் பிரகாரத்தை சுற்றிலும் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கருங்கற்கள் தரை அமைக்கப்பட்டுள்ளது.
    • வெள்ளீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள உப சன்னதிகளில் உள்ள கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது.

    பூந்தமல்லி:

    மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலின் உப கோவிலான வெள்ளீஸ்வரர் கோவிலும் இதே பகுதியில் அமைந்துள்ளது. தொண்டை மண்டல நவகிரக தலங்களில் சுக்கிரன் பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.

    கோவில் பிரகாரத்தை சுற்றிலும் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கருங்கற்கள் தரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் உள்ள அனைத்து விமானங்களும் பரிவார சன்னதிகளும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய வண்ணம் தீட்டப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று கும்பாபிஷேக விழா நடந்த முடிவு செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று அதிகாலை நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கலசங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தின் மேல் விமானத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. மேலும் வெள்ளீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள உப சன்னதிகளில் உள்ள கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவள்ளூர் ஜெயாநகர் பகுதியில் அமைந்துள்ள மகா வல்லப கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.

    ×