என் மலர்
நீங்கள் தேடியது "Vaithilingam MP Request"
- புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளு மன்றத்தில் பேசியதாவது:-
- ஏ.எப்.டி, பாரதி, சுதேசிமில் நூற்பாலைகள் விஸ்தாரமான நிலப்பரப்பில் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளு மன்றத்தில் பேசியதாவது:-
புதுவை நகர பகுதியில் அரசுக்கு சொந்தமான ஏ.எப்.டி, பாரதி, சுதேசிமில் நூற்பாலைகள் விஸ்தாரமான நிலப்பரப்பில் உள்ளது.
இந்த 3 ஆலைகளும் இயக்கப்படாமல் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர்.
இந்த 3 ஆலைகளும் புதுவை, கடலூர் சாலையில் 100 ஏக்கர் பரப்பில் உள்ளது. இங்கு பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். இதன்மூலம் புதுவை மனித வளத்தை பயன்படுத்தலாம் என பேசினார்.






