என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பஞ்சாலைகளில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்வைத்திலிங்கம் எம்.பி. கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    பஞ்சாலைகளில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்வைத்திலிங்கம் எம்.பி. கோரிக்கை

    • புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளு மன்றத்தில் பேசியதாவது:-
    • ஏ.எப்.டி, பாரதி, சுதேசிமில் நூற்பாலைகள் விஸ்தாரமான நிலப்பரப்பில் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளு மன்றத்தில் பேசியதாவது:-

    புதுவை நகர பகுதியில் அரசுக்கு சொந்தமான ஏ.எப்.டி, பாரதி, சுதேசிமில் நூற்பாலைகள் விஸ்தாரமான நிலப்பரப்பில் உள்ளது.

    இந்த 3 ஆலைகளும் இயக்கப்படாமல் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர்.

    இந்த 3 ஆலைகளும் புதுவை, கடலூர் சாலையில் 100 ஏக்கர் பரப்பில் உள்ளது. இங்கு பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். இதன்மூலம் புதுவை மனித வளத்தை பயன்படுத்தலாம் என பேசினார்.

    Next Story
    ×