search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikuntaekadasi"

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெறவிருக்கிறது. 14-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் திகழும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெறவிருக்கிறது. பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை ஆயிரங்கால் மண்டபம் அருகே நடைபெற்றது.

    விழாவையொட்டி 3-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 13-ந்தேதி நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    20-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 21-ந்தேதி தீர்த்தவாரியும், 23-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. அன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று காலை 04.45 மணி முதல் இரவு 10.00 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.
    ×