search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uterine Disorder"

    • சில பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பதுண்டு.
    • மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதலுடன் செய்தால் பாதுகாப்பானது.

    நம் ஊரைப் பொறுத்தவரையில் கல்யாணம் போன்ற குடும்ப விழாக்கள், குடும்பத்துடன் சேர்ந்து டூர் போவது, தவிர்க்க முடியாத கோயில் பயணங்கள் போன்ற காரணங்களுக்காக, சில பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பதுண்டு. இதற்காக அவர்கள் மாத்திரைகளைப் பயன்டுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

    அப்படி, மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் பாதுகாப்பானவை தானா...? அந்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடலாமா...? எவற்றில் எல்லாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்...? எவற்றை எல்லாம் செய்யக் கூடாது?

    மாதவிடாயைத் தள்ளிப்போட நினைக்கும் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன...?

    சுயமருத்துவம் கூடாது

    "மாதவிடாயை, மாத்திரைகளின் உதவியோடு தள்ளிப்போடுவதை ஒரு மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதலுடன் செய்தால் அது பாதுகாப்பான ஒன்று. ஆனால், மருத்துவரைப் பார்க்காமல் தாங்களாகவே மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கிபயன்படுத்தக்கூடாது. எனவே, இந்த விஷயத்தில் பெண்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. குறிப்பாக தாங்களாகவே மெடிக்கல் ஷாப்பில் மாத்திரைகளை வாங்கிப் போடக்கூடாது.

    பக்கவிளைவுகள்

    மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்து முடித்த பின்னர், மீண்டும் பீரியட்ஸ் வரும்போது சிலருக்கு பழையபடி நார்மலாக வரும். சிலருக்கு பீரியட்ஸ் தள்ளிப் போகும். 30 நாள்கள் சுழற்சி உள்ளவர்களுக்கு, சில சமயங்களில் 45 நாள்கள் கழித்தும்கூட வரலாம். சிலருக்கு உதிரப்போக்கு அதிகமாகலாம். மாதவிடாய் சமயத்தில் வயிறு இழுத்துப் பிடிக்கலாம்.

    இன்னும் சொல்லப்போனால், தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை பயன்படுத்தும்போதே சிலருக்கு தசைப்பிடிப்பு உண்டாகலாம். இவைபோன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சிலருக்கு மிக நார்மலாகக்கூட பீரியட்ஸ் வரலாம். இவை அனைத்துமே ஆளுக்கு ஆள் மாறுபடும்.

    எனவே, மாதவிலக்கை தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்த பின்பு மீண்டும் பீரியட்ஸ் வரும்போது, உங்களுக்கு வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் தெரிந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உங்கள் மகப்பேறு மருத்துவரை உடனே சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது மிக அவசியம்.

    ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

    மாதவிடாயைத் தள்ளிப்போட மாத்திரைகளை எடுத்தால், அதனால் கருப்பையில் கட்டி வரும், குழந்தை பிறப்பதில் சிக்கல் வரும் என்றெல்லாம் சிலர் சொல்வதுண்டு. ஆனால் அச்செய்திகளில் உண்மை எதுவும் இல்லை. அதேநேரத்தில், எதுவுமே குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிப்போனால் அது நல்லதில்லை அல்லவா? எனவே, மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் ஹார்மோன்கள் தொந்தரவு அடைய வாய்ப்பிருக்கிறது.

    மாதவிடாய் வலி... மெஃப்தால் ஸ்பாஸ் மாத்திரை... உஷார் பெண்களே... உஷார்!

    மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காகக் கொடுக்கப்படும் மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள். எனவே, வெளியில் இருந்து திரும்பத்திரும்ப ஹார்மோன்களைக் கொடுக்கும்போது, அதனால், உடலில் ஏற்கெனவே இருக்கும் ஹார்மோன்களில் சமநிலையின்மை ஏற்பட்டுவிடும். எனவே, மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

    • ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும்.
    • மெனோபாஸ் வயது என்பது 50 தான்.

    * மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹோர்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், இதை நினைத்து பயந்துவிட வேண்டாம். அதேநேரம், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    * 50 வயதிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பொப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

    * 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது.

     * மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹோர்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரிமெனோபாஸ் நேரத்திலும் வரும்.

    * ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும். அவர்கள் தாராளமாக மாத்திரை எடுக்கலாம், தவறில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    * பத்து பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிடுகிறது. இது, சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது.

    * அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவ ரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.

    * இந்த காலத்தில் கால தாமதமான திருமணம் காரணமாக நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாம் பார்த்து வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×