search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train accidnet"

    கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் ரெயில் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    சிவகங்கை மாவட்டம் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகன் ஜெயசூர்யா (வயது 18). இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கி எலட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று நண்பர்களுடன் சிங்காநல்லூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியே வந்த ரெயில் ஜெயசூர்யா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினர். நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஜெயசூர்யாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன்றி இன்று காலை ஜெயசூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வருகிறார்.
    ×