search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato Facial"

    • கண்களின் மேல் வெள்ளரி'யை வைத்துக்கொள்வது சிறந்தது.
    • முக சுருக்கங்களை குறைக்க தக்காளி ஃபேஷியல் உதவுகிறது.

    வசீகர முக அழகிற்கு இயற்கையாக விளையும் பொருட்கள் பயன்தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பப்பாளிப்பழம், செலவு இல்லா பேஷியலை தரும். பப்பாளிப் பழத்தை கூழ் ஆக்கி, முகத்தில் பூசி, 15 நிமிடத்துக்கு பிறகு வெந்நீரில் முகத்தைக் கழுவினால் முகத்தை பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பப்பாளி தோலின் அடிப்பகுதியை தொடர்ந்து பூசினால் சருமம் நீரோட்டம் பெற்றுப் பொலிவடையும்.

    அதேபோல வெள்ளரி காய்களை நறுக்கி கண்களில் வைத்து கட்டினால், கண்கள் பிரகாசம் அடையும், கண் எரிச்சலும் குறையும். கருவளையம் மறையும்.

    கணினி முன்னால் அதிக நேரம் குடியிருக்கும் அனைவரும் `கண்களின் மேல் வெள்ளரி'யை வைத்துக்கொள்வது சிறந்தது. விளக்கெண்ணெயையும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தைப் போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள்.

    அடுத்ததாக, கற்றாழை கூழை முகத்தில் தொடர்ந்து தேய்த்து சிறிது நேரம் இருப்பதால் பருக்கள் வராமல் தடுக்கலாம். கிருமிநாசினியான கற்றாழை, தோல் சுருக்கங்களை தடுக்கிறது. முகத்தில் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்களுக்குக் கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்து சிறுவர்களின் இயற்கை ஒப்பனை பொருள் குளுகுளு கற்றாழைதான்.

    இதுதவிர, சந்தன சாந்தை நெற்றியில் தடவும் வழக்கம், சங்க கால மக்களிடம் இருந்துள்ளது. முகத்தை மெருகேற்ற நம் மரபோடு பயணித்த சந்தனத்தை, எந்த சிந்தடிக் கிரீம்களாலும் மிஞ்ச முடியாது.

    முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் தடுக்கவும் தக்காளி பேஷியல் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் தோலுக்கு ஊட்டம் தருகிறது.

    நிறைய தண்ணீர் அருந்துவது மேனியை அழகாக்கும் என்பது காலம்காலமாகத் தொடர்ந்துவரும் அழகு குறிப்பு. முகத்தை நிரந்தரமாக அழகுபடுத்த வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழ வகைகளை உட்கொள்ள வேண்டும். அதிகரிக்கும் மன அழுத்தம் முகப் பொலிவைப் பெருமளவு பாதிக்கும். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி.

    ×