search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toll gate employees"

    மேல்மருவத்தூர் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுராந்தகம்:

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று காலை கார் மூலம் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். டிரைவர் பாஸ்கர் காரை ஓட்டினார்.

    மேல்மருவத்தூர் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியை கார் கடந்தபோது அங்கிருந்த ஊழியர்களுக்கும், டிரைவர் பாஸ்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து வேல்முருகன் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.
    ×