search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirupathur collector inspection"

    திருப்பத்தூர் கனிம சுரங்கத்தில் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் டாமின் வெர்மிகுலேட் சுரங்கம் 1978 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

    திருப்பத்தூர் தாலுகா செவ்வத்தூர் மற்றும் எலவம்பட்டி ஊராட்சி பகுதிக்குட்பட்ட 23,710 எக்டேர் பரப்பளவில் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனிமம் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த கனிம சுரங்கத்தில் வெர்மிகுலேட் கனிமம் வெட்டி எடுக்கப்படுகிறது.

    இந்த வெர்மிகுலேட் கனிமம் வெப்பத்தை தனிக்கும் தன்மை கொண்டதால் வீடுகளின் கூரைகளில் பதிக்கவும், மின்சார இன்சுலேட்டர்கள் பேருந்து மேற்கூரை சீட், மேலும் வேளாண்துறையில் மரக்கன்றுகளை சுற்றி போடப்பட்டு ஈரப்பதத்தை பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

    மாதத்திற்கு 100 முதல் 150 டன் அளவிற்கு வெட்டி எடுக்கப்படும் வெர்மிகுலேட் வேளாண் பயன்பாட்டிற்காக கோவை, தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் மட்டும் கனிமம் வெட்டும் பணிகள் நடைபெறும். மழைக்காலத்தில் இந்த சுரங்கப் பணிகள் நடைபெறாது.

    இந்த நிறுவனத்தில் 40 பணியாட்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

    தொடர்ந்து நவீன தொழில் நுட்பத்தை கொண்டு ரூ.1.80 கோடி மதிப்பில் பட்டப்பட்டுள்ள புதிய வெர்மிகுலேட் கனிமத்தை தரம்பிரித்து சுடேற்றி பிரிக்கும் அலகு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

    இதேபோன்ற அமைப்பு சென்னை அம்பத்தூரில் இயங்கி வருகிறது. இந்த வெர்மிகுலேட் தாது கனிமத்தை எடுத்து வரும் செலவை குறைக்கும் வகையில் இந்த புதிய சுரங்க அலகு கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பெருமளவு பயண நேரம் மிச்சப்படும் கலனின் போட்டு சூடேற்றப்படும் போது வெர்மிகுலேட் கனிம தாது மண் பாப்கார்ன் போன்று மாறிவிடும்.

    இவற்றை 3 பிரிவாக தரம் பிரித்து அதன் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படும். இந்த அலகை விரைவில் தமிழக முதல் அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்கள் என்று டாமின் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு, கலெக்டர் ராமனிடம் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து கந்திலி ஊராட்சி ஒன்றியத்து ஊரக வளர்ச்சி மூலம் கட்டப்பட்டுள்ள தனிநபர் கழிப்பறை கட்டமைப்பு மற்றும் பாரத பிரதம மந்திரியின் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டினையும் பார்வையிட்டார்.

    சப்-கலெக்டர் பிரியங்கா, டாமின் கனிம நிறுவன கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு, சுரங்க பணி உதவியாளர் கார்த்திகேயன், திருப்பத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி, வட்டா வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சந்திரன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    ×