search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruporur thunder hit"

    திருப்போரூர் அருகே இடி தாக்கி மாடி வீடு இடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thunderhit

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமம் மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் அரிராமன்.

    இவர் தண்டலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று இரவு வழக்கம்போல் அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டின் முன் வராண்டாவில் படுத்து தூங்கினார்.

    நள்ளிரவு 1 மணியளவில் இந்த பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. எனவே மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டின் உள்ளே சென்று படுக்க சொல்லிவிட்டு அரிராமன் மட்டும் வராண்டாவில் படுத்து தூங்கியுள்ளார்.

    1.30 மணியளவில் திடீரென பயங்கரசத்தத்துடன் இடி சத்தம் கேட்டுள்ளது. வீட்டின் மாடியின் சைடு பகுதியில் இடிதாக்கி மாடியின் சைடு பகுதியின் சுவர் இடிந்து விழுந்தது இதில் வராண்டாவில் படுத்திருந்த அரிராமனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    வராண்டாவில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது. இடி தாக்கியதில் சுமார் ரூ. 2 லட்சம் அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேதம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    ×