search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirumandurai tollgate"

    வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மங்களமேடு:

    தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தில் காயம் அடைந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்க சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    மாவட்ட செயலாளர் உலக செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிவகுமார், ராமர், ராதாகிருஷ்ணன், மணிகண்டன் உள்பட 36 பேர் கலந்து கொண்டனர். 

    இதுகுறித்து தகவல் அறிந்து மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர்.
    ×