search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft in own house"

    • மாரிமுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோத 10 பவுன் தங்க நகையை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அனுமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. அவரது கவுசல்யா. சில வருடங்களுக்கு முன்பு தென்தொரசனூரில் வசிக்கும் மாரிமுத்துவின் தங்கை நல்லம்மாள் மகனுக்கு தன்னுடைய மகள் கவுசல்யாவை திருமணம் செய்து வைத்ததார். திருமணத்திற்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னசேலம் அருகே உள்ள அமையாகாரம் பாலாஜி கல்வியியல் கல்லூரியில் வீட்டிலிருந்தே பயிற்சி ஆசிரியர் வகுப்பை படித்து வந்தார்.

    மேற்படி படிப்பின் பயிற்சி காலம் கடந்த ஜூலை மாதம் ஆரம்பித்து நடைபெற்று வந்தது. பயிற்சி இடம் நைனார்பாளையத்தில் உள்ள பள்ளியில் பயிற்சி பெற்று வந்ததார். தென்தொரசனூரிலிருந்து நைனார்பாளையத்திற்கு தினமும் வந்து செல்ல கவுசல்யாவிற்கு சிரமமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அனுமந்தல்குப்பத்தில் வசிக்கும் தன்னுடைய தந்தை மாரிமுத்துவின் வீட்டிலிருந்து நைனா ர்பாளையத்தில் உள்ள பள்ளியில் தினமும் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்துள்ளார்.

    கடந்த 15-ந் தேதி பள்ளிக்கு சென்று மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கவுசல்யா தனது கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பிறகு மாரிமுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோத 10 பவுன் தங்க நகையை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் நேற்று கீழ்க்குப்பம் போலீஸ் நிலையத்தில் மகள் கவுசல்யா மீது மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×