என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theenee.Jayakumar"

    • புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • வேளாண், விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் கீழ் புதிய தோட்டம் நிறுவ, பராமரிக்க, மலர் சாகுபடி, கலப்பின காய்கறி, பழ பயிர்கள், வாசனை பயிர்கள் சாகுபடிக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண், விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் கீழ் புதிய தோட்டம் நிறுவ, பராமரிக்க, மலர் சாகுபடி, கலப்பின காய்கறி, பழ பயிர்கள், வாசனை பயிர்கள் சாகுபடிக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கப்படுகிறது.

    இதன்படி 182.72 எக்டேர் பரப்பில் ஆடிபட்டம் 2022-ல் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்த 540 தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.28 லட்சத்து 77 ஆயிரத்து 288 அவரவர் வங்கி கணக்கில் நேரடி பண பரிமாற்றமாக செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • காசியை போல் திருக்காஞ்சியிலும் கங்கா ஆரத்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    • திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது. இதற்காக சங்கரா பரணி ஆற்றில் படித்துறைகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முதல் முறையாக வருகிற ஏப்ரல் மாதம் 22-ந் தேதி மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    காசியை போல் திருக்காஞ்சியிலும் கங்கா ஆரத்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி புஷ்கரணி விழா நடைபெறும் வரை வாரந்தோறும் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது. இதற்காக சங்கராபரணி ஆற்றில் படித்துறைகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைத்துள்ளனர்.

    கங்கா ஆரத்தி விழாவை சிறப்பிக்கும் வகையில் கங்கை நதீஸ்வரர் கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் எழுதிய பாடலுக்கு கொங்கணவர் கலைக்கூடம் இசைகலைஞர் கலைதாசன் இசை அமைத்துள்ளார்.

    இந்த பாடலின் குறுந்தகடு (சி.டி.) வெளியீட்டு விழா கோவில் வளாகத்தில் நடந்தது. அதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட, இந்து அறநிலைத்துறை செயலர் உதயகுமார் பெற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து பாடலின் சிறப்புகளையும், பாடல் குறித்த முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீதாராமன், செயல் அதிகாரி சதீஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    திருக்காஞ்சி சங்கராபரணி கங்கா ஆரத்தி பாடல் குறுந்தகட்டை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டபோது எடுத்தபடம்.

    • மனித நேய அறக்கட்டளை சார்பில் புனர மைக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • அங்கன்வாடி மையத்துக்கு தேவையான மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதியில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு கழகம் நிர்வாகத்தின் கீழ் உள்ள 2 அங்கன்வாடி மையத்தை மங்கலம் பகுதியில் உள்ள சூப்பர்பில் புரோடக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் நிதி மூலம் வ. .உ. சி. முன்னாள் மாணவர்கள் மனித நேய அறக்கட்டளை சார்பில் புனர மைக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது.

    அங்கன்வாடி மையத்தை வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயகுமார் திறந்து வைத்து அங்கன்வாடி பொறுப்பா ளர்களிடம் ஒப்படைத்தார். விழாவில் வ. உ.சி. அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் நலமேம்பாட்டு கழக இயக்குனர் முத்துமீனா மற்றும் , திட்ட அதிகாரி கருணாநிதி , வட்டார வளர்ச்சி அதிகாரி பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    சூப்பர்பில் புரோடக்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் இளவரசன் மற்றும் சரவணன் அறக்கட்டளை உறுப்பினர்கள் விஜய ராஜா, மணவாளன் , சார்லஸ் ,பாபு,செந்தில்குமார், ஆறுமுகம் முத்து, விஜய், மூர்த்தி கலந்துகொண்டனர்,

    விழாவில் அங்கன்வாடி மையத்துக்கு தேவையான மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், வழங்கப்பட்டது.

    ×