என் மலர்
நீங்கள் தேடியது "The women danced to the rhythm of the drum"
- டிரோன் கேமராக்களுடன் 1000 போலீசார் பாதுகாப்பு
- முஸ்லிம்கள் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது இதை ஒட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 686க்கு மேற்பட்ட சிலைகள் இந்து முன்னணி, பாஜக, மற்றும் இந்து அமைப்புகள், இளைஞர்கள், சார்பில் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் திலகர் இந்து இளைஞர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாணியம்பாடி மெயின் ரோடு பிள்ளையார் கோவில் அருகில் விநாயகர் ஊர்வலம் தொடங்கியது விநாயகர் ஊர்வலத்திற்கு விழா குழு தலைவர் பாஜக மாவட்ட துணை தலைவர் வி.அன்பழகன், நகரத் தலைவர் ஆர் சண்முகம் தலைமையில் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஜி. மூர்த்தி பொதுச் செயலாளர் கண்ணன் சிலை ஊர்வலத்தை கொடி அசைத்து அசைத்து தொடங்கி வைத்தனர்.
வீட்டில் படைக்கப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை பெண்கள் தலையில் தூக்கி நூற்றுக்கணக்கான பெண்கள் ஊர்வலத்திற்கு முன்னர் வந்தனர் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் டிரோன் கேமராக்களுடன் 1000, போலீசார் உடன் ஊர்வலம் தாரை தப்பட்டை பம்பையுடன் இளைஞர்களின் வீர சாகசங்கள் உடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
வாணியம்பாடி மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, தண்டபாணி கோயில், தெரு, கோட்டை தெரு, சிவன் ஆலயம், நகைக்கடை தெரு, ஆலங்காயம் ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, வழியாக ஹவுசிங் போர்டு சென்றடைந்தது. அங்கிருந்து அனைத்து விநாயகர் சிலைகளும் தர்மபுரி அருகே உள்ள இரும்புத்தூர் ஆற்றில் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
வாணியம்பாடி மெயின் ரோட்டில் தொடங்கிய ஊர்வலம் தண்டபாணி கோயில் தெரு அருகே வந்தவுடன் அனைத்து சிலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டது அங்கிருந்து சிவன் கோயிலுக்கு கோட்டை தெரு ஆலமரம் முஸ்லிம் தெரு வழியாக செல்ல வேண்டும் இந்த வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி தரப்படவில்லை ஆகையால் அனைத்து விநாயகர் சிலைகளும் தண்டபாணி கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியினர் இந்து முன்னணியினர் அனைவரும் சிவன் கோயிலுக்கு சென்று அங்கு மதிய உணவுக்கு பிறகு அங்கு இருந்த விநாயகர் சிலைக்கு பூஜை செய்து மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் மேளதாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டு மீண்டும் தண்டபாணி கோயில் அடைந்து அங்கிருந்து அனைத்து விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் புறப்பட்டது.
சிவன் கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்ட உடன் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள் முஸ்லிம்கள் அங்கு விநாயகருக்கு பூஜை செய்து பூந்தி, பேரிச்சம் பழத்தை விநாயகருக்கு படைத்தனர். போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்கள்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சிறிய விநாயகர் சிலைகளை தூக்கி வந்த பெண்கள் மேளதாளத்திற்கு ஏற்ப நடனமாடி சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ஆயுதப்படை சிறப்பு பிரிவு போலீசார், மற்றும் கமாண்டோ படை, பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் உள்ளூர் போலீசார்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், மேலும் வழிநெடுக்கும் கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ மற்றும் போட்டோ கேமராக்கள், போலீசார்உடலில்மாட்டி கொண்டு (பாடி வித் கேமிரா) கேமரா எடுக்கும் கேமராக்கள், டிரோன் கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருந்தனர். இது மட்டுமின்றி திருப்பத்தூர் முழுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.