என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the red flower"

    • உளுந்தூர்பேட்டை அருகே: வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் செங்காந்தல் மலர் பூத்துள்ளது.
    • இந்த மலர் தமிழ்நாட்டின் தேசிய மலராக விளங்குகிறது

    கள்ளக்குறிச்சி:

    அரிய வகை மலர்களில் ஒன்றான செங்காந்தல் மலர். இது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூத்து மலரும் தன்மை கொண்டது. இந்த மலர் தமிழ்நாட்டின் தேசிய மலராக விளங்குகிறது. இது தமிழகத்தின் மலராகவும் விளங்குவது கூடுதல் சிறப்பு. கார்த்திகை மாதங்களில் பூப்பதால் இதை கார்த்திகை மலர் எனவும், தீச்சுவாலை போன்ற உருவ அமைப்பு கொண்டுள்ளதால் தீச்சுவாலை மலர் என்றும் அழைக்கப்படுகிறது.

    மேலும் இந்த மலரை பார்த்தால் கண் வலி ஏற்படும், என கிராமங்களில் பரவலான நம்பிக்கை உள்ளதால் கண்வலி மலர் என பல்வேறு பெயர்களில் இந்த மலர் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த மலர் பல்வேறு விஷமுறிவு மருந்துகளுக்கு மலரின் இதழ், தண்டு, விதை, வேர்கிழங்கு உள்ளிட்டவை பயன்படுகிறது.

    ஒட்டன்சத்திரம் உள்ளி ட்ட சுற்றுவட்டாரத்தில் இவை பணப்பயிராக பயிரிடப்பட்டு அறுவடை செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இந்த மலர் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றிலுமுள்ள பகுதிகள் தற்போது பூத்து குலுங்குகிறது. 

    ×