என் மலர்
நீங்கள் தேடியது "The car burst into flames. கார் தீப்பிடித்து எரிந்தது"
- ஆவடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் விஸ்லி (வயது 41). இவர் நேற்று இரவு புடவைகளை ஆம்னி காரில் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
- வாகனம் சந்தை பேட்டை வந்தபோது எதிர்பாராத விதமாக வாகனத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ஜலகண் டாபுரம், ஆவடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் விஸ்லி (வயது 41). இவர் நேற்று இரவு புடவைகளை ஆம்னி காரில் ஏற்றி சென்று கொண்டிருந்தார். வாகனம் சந்தை பேட்டை வந்தபோது எதிர்பாராத விதமாக வாகனத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
ஜான்விஸ்லி உடனடியாக காரை நிறுத்தி விட்டு வெளியேறியதுடன் காரில் இருந்த சேலை மூட்டைகளை அப்புறப்படுத்தினார். அப்போது
தீ மளமளவென பரவியதில் ஆம்னி வாகனம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இச்சம்பவத்தில் ஆம்னி வாகனம் முழுதும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.






