search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The boat"

    • மூங்கில் மரத்தாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது.
    • ஒரு பொம்மையும் உட்கார்ந்து வருவது போல் அழகான அமைப்புகளும் செய்யப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் மர்மமான முறையில் நேற்று மூங்கில் மரத்தாலான படகு ஒன்று மிதந்து வந்து கரையில் ஒதுங்கி உள்ளது.

    இதனை கண்ட மீனவர்கள் ஆச்சரியத்துடன் மீட்டு அதை பார்த்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக கடலோர பாதுகாப்பு படையினரும் பொறையார் காவல் நிலைய போலீசாரும் அதில் விசாரணை செய்தனர்.

    அதில் ஒரு பொம்மையும் உட்கார்ந்து வருவது போல் அழகான அமைப்புகளும் செய்யப்பட்டிருந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

    இது எந்த நாட்டில் இருந்து வந்தது என்பது தெரியாமல் இருந்து வருகின்றனர்.

    ×