search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple festival dispute"

    நெல்லை மாவட்டம் சுரண்டையில் கோவில் விழாவில் குடிபோதையில் போலீசாரை தாக்கிய ராணுவவீரர் கைதானார். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுரண்டை மேல தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் ஹரியானா மாநிலத்தில் ராணுவவீரராக வேலைபார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று அந்தப்பகுதியில் உள்ள அழகுபார்வதி அம்மன் கோவிலில் தேரோட்ட விழா நடந்தது. விழாவுக்கு சுரேஷ் குடிபோதையில் சென்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும், ராணுவ வீரர் சுரேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீர் என்று சுரேஷ் அங்கு கிடந்த கம்பை எடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பேரானந்தசாமியை தாக்கினார். அதை தடுத்த மற்றொரு போலீஸ்காரர் குமாரையும் தாக்கினார். இதில் போலீசாருக்கு கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கூடுதல் போலீசார் விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட சுரேசை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கொடுத்த புகாரில்  உயர் போலீஸ் அதிகாரிகள், ராணுவவீரர் சுரேஷ்சிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×