என் மலர்
நீங்கள் தேடியது "Teeney.Jayakumar"
- ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இயற்கை விவசாயிகளுக்கு தரசான்றிதழ் வழங்க முயற்சியெடுத்தது.
- சான்றிதழ் பெற்ற விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்துவதற்கும், பொருளாதார நிலையை உயர்த்தி கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.
புதுச்சேரி:
ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இயற்கை விவசாயிகளுக்கு தரசான்றிதழ் வழங்க முயற்சியெடுத்தது.
இதன்படி புதுவை, காரைக்கால் இயற்கை விவசாயிகளுக்கு மத்திய அரசின் பி.ஜி.எஸ். இந்தியா இயற்கை தர சான்றிதழ் ப்ரித்வி இன்டிஜினியஸ் நேச்சுரல் பார்மர்ஸ் டிரஸ்ட் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து விழிப்புணர்வுகள், பயிற்சிகள், கள
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புதுவை பகுதி விவசாய குழுக்களுக்கு இயற்கை தர சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் விவசாயிகளுக்கு மத்திய அரசு தர சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-
புதுவை மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் ஒரு தொடக்க நிகழ்வாக இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சான்றிதழ் பெற்ற விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்துவதற்கும், பொருளாதார நிலையை உயர்த்தி கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.
வேளாண் உற்பத்தி பொருட்களை விவசாயிகள் மதிப்பு கூடுதல் செய்து இணைய தளத்திலேயே பதிவேற்றம்
செய்யலாம். இதனால் உலகத்தில் எந்த பகுதியிலிருந்தும் இந்த பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும். எந்த விவசாயி மூலம் விளைவிக்கப்பட்டது போன்ற விபரங்களையும் அறிந்து கொள்ளமுடியும்.
விவசாயியும், நுகர்வோரும் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் மத்தியில் தற்போது இயற்கை விவசாய பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இது விவசாயிகள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய முடியும். புதிதாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கையும் உத்வேகத்தையும் கொடுக்கும்.
புதுவை அரசு இயற்கை விவசாயத்திற்கும் , விவசாயிகளுக்கும் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை தர சான்றிதழ் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் வசந்தகுமார், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய
மா நில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால், மற்றும் இயற்கை உழவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அரசு திட்டங்களில் எந்த நிதியுதவியும் பெறாத ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
- அரசின் மாத உதவித்தொகை பெறாத ஏழை பெண்கள் 17 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். இவர்களுக்கு அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அரசு திட்டங்களில் எந்த நிதியுதவியும் பெறாத ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
பொங்கல் பண்டிகைக்குள் இந்த மாத உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்- அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கான கோப்பு கவர்னர் தமிழிசையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் தமிழிசை இந்த கோப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த தகவலை கவர்னர் தமிழிசை உறுதி செய்தார். இதை அரசாணையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களே இருந்தாலும் இத்திட்டத்தை உடனடியாக தொடங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தகவலை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
அரசின் மாத உதவித்தொகை பெறாத ஏழை பெண்கள் 17 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். இவர்களுக்கு அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து அரசின் உதவி பெறாத பெண் பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
அதிகபட்சம் 40 ஆயிரம் ஏழை பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு இத்திட்டத்தை தொடங்கிவைக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






