என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவில்பட்டி கடலை மிட்டாய்இ"
கோவில்பட்டி:
தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் புகழ் பெற்றது.
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த கரிசல் பூமியாகும். இங்கு விளைவிக்கப்படும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்புச்சுவை அதிகம். இதனால் அனைவரும் விரும்பும் உணவு பண்டமாக கடலை மிட்டாய் திகழ்கிறது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாயை உலகளவில் கொண்டு செல்ல தபால்துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.
இந்நிலையில் கோவில்பட்டி கடலை மிட்டாயை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கான முயற்சியை கோவில்பட்டி கோட்ட தலைமை தபால் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாயை தபால்துறை மூலம் பணம் செலுத்தி வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி தபால்துறை மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே கொண்டு சேர்க்கப்படும்.
இந்தியாவின் எந்த தபால் நிலையத்திலும் ரூ.390 செலுத்தி ஆர்டர் செய்தால் அது கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் இணையம் மூலம் பெறப்பட்டு அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டிற்கே விரைவு தபால் மூலம் கொண்டு சேர்க்கப்படும்.
ரூ. 390 செலுத்தி விரைவு தபால் மூலம் பெறப்படும் பார்சலில் மொத்தம் ஒரு கிலோ எடை கொண்ட 5 கடலை மிட்டாய் பாக்கெட்டுகள் இருக்கும். விரைவு தபாலுக்கென தனி கட்டணம் கிடையாது.
மேலும் வீட்டில் இருந்தபடியே தபால்காரர் மூலமாகவும் ரூ.390 செலுத்தி கடலை மிட்டாயை ஆர்டர் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்