search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stolen jewellery"

    கொல்கத்தாவில் உள்ள பிரபல ஷோரூமில் கொள்ளையடிக்கப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரபல நகைக்கடையில் தினேஷ் ரானா என்பவர் சேல்ஸ் மேனாக பணியாற்ரி வந்தார். நான்கு நாட்களுக்கு முன் தினேஷ் கடையில் உள்ள பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளுடன் தலைமறைவாகினார். இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், தினேஷ் சத்ரா பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சத்ரா கிராமத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அதில் ரம்தேயோ ரானா என்பவர் வீட்டில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியான தினேஷ் ரானா தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    ×