என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "st Peter Paul"

    நாகர்கோவில் அருகே சரல் தூய பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    நாகர்கோவில் அருகே சரல் தூய பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவில் இன்று காலை 6.30 மணிக்கு கல்லறை தோட்டத்தில் திருப்பலி, மாலை 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமைதாங்கி திருவிழா கொடியேற்றிவைக்கிறார். அதைதொடர்ந்து ஜெபமாலை, நவநாள் திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    விழாநாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி, இரவு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 30-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மதியம் 12 மணிக்கு அன்பு விருந்து, இரவு 8 மணிக்கு அன்பியங்களுக்கு இடையே நடனப்போட்டி ஆகியவை நடக்கிறது.

    1-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, 8 மணிக்கு திருப்புமுனை ஆயர்இல்லம் அருட்பணியாளர் ஆன்றனி அல்காந்தர் கலந்துகொண்டு ஆடம்பர திருவிழா திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து விழாவை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பெஸ்கி, அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள். 
    ×