search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spiritual Books Outlet"

    • வளர்ச்சிப் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடியற்காலை முதல் இரவு வரையில் வந்து நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை பக்தியுடன் வணங்குவர். இதனால் பக்தர்களுக்கு வீடு,நிலம், திருமணம், பிள்ளை பேரு, உத்தியோகம் உள்ளிட்டவை சிறப்பாக அமைவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், இக்கோவிலில் உள்ள திருக்குளத்தை ரூ.3.14கோடி செலவில் சீரமைக்கும் பணியை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை துவக்கி வைத்தார்.

    இந்நிலையில், அதனை வரவேற்கும் வகையிலும்,ரூ.2.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆன்மீக நூல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் என மொத்தம் ரூ.3 கோடியே16 லட்சத்து 30 ஆயிரம் செலவிலான வளர்ச்சிப் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சிராணிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு ஆன்மீக நூல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தனர். இதன் பின்னர், திருக்குளத்தை சீரமைக்கும் பணியின் பூஜையில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பார்த்தசாரதி, ஒப்பந்ததாரர் விஜயகுமார், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் இ.ஜெகன்உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் திருக்கோவிலின் பணியாளர்களும், ஊழியர்களும், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×