search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern District Congress"

    உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #Congress
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார்.

    இக்கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குளம் பழனிச்சாமி, சந்திரசேகர், வட்டார தலைவர்கள் நடராஜ், ஆண்ட முத்துசாமி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ரவி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஆர்.எம்.பழனிச்சாமி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் வினோத், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கலா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் லோகேஸ்வரன், விஜய், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-

    அக்டோபர் 2-ம் தேதி அன்று காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியைக் ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது அன்று நடைபெறக்கூடிய கிராமசபை கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட செய்வது கிராமசபை கூட்டத்தில் உள்ளூரில் நிலவும் பிரச்சினைகளை மையப்படுத்தி அதை சரிசெய்யும் தீர்மானங்களை நிறைவேற்ற செய்ய வேண்டும்.

    அக்டோபர் 4ஆம் தேதியன்று நடைபெறக்கூடிய திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது பூத் கமிட்டி அமைக்காத பகுதிகளில் உடனடியாக பூத் கமிட்டி அமைத்து நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.

    தியாகி குமரனுக்கு சென்னிமலையில் அவர் பிறந்த வீட்டை மணிமண்டபம் கட்டி அரசு விழா தொடர்ந்து நடக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட துணை தலைவர் ராஜா சத்தியமூர்த்தி நன்றி கூறினார். #Congress
    ×