search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sonali pogat"

    • பிரபல நடிகையும், அரியானா மாநில பா.ஜனதா நிர்வாகியுமான சோனாலி போகாட் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார்.
    • இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் தெரிவித்த பின்னர், இவ்வழக்கில் அடுத்தடுத்து சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42), தனது அலுவலக உதவியாளர்களுடன் கோவா சென்றிருந்த நிலையில் கடந்த 22-ந்தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சோனாலி போகட் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் கோவா போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சக்வான், சுக் விந்தர் வாசி ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வடக்கு கோவா அஞ்சனாவில் உள்ள ரெஸ்டாரண்டில் நடந்த விருந்தில் போதை ஏற்படுத்தும் ஒரு வேதிப் பொருளை தண்ணீரில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக உதவியாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

    சோனாலி போகட்

    சோனாலி போகட்

     

    இதற்கிடையே சோனாலியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங்கை கோவா போலீசார் கைது செய்தனர்.

    அதன்பின்னர் சோனாலி போகட் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சோனாலி பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சி நடந்த கிளப் உரிமையாளர் எட்வின் நூனெஸ் கைது செய்யப்பட்டார். அந்த கிளப்பின் கழிப்பறையில் போதை பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து அவர் கைதாகி உள்ளார். போதை பொருள் தன்மை குறித்து இன்னும் உறுதிப் படுத்தபடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் சுதிர் சுக்வானுக்கு போதை பொருளை விற்றதாக தத்தா பிரசாத் காவங்கர் கைது செய்யப்பட்டார். இவர் சோனாலி தங்கியிருந்த ஓட்டல் அறையின் ரூம் பாயாக பணியில் இருந்துள்ளார்.

     

    சோனாலி போகட்

    சோனாலி போகட்

    இந்நிலையில் மேலும் ஒரு போதை பொருள் விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர். ரமா மஞ்ச்ரேக்கர் என்ற போதை பொருள் வினியோகம் செய்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • பிரபல நடிகையும், அரியானா மாநில பா.ஜனதா நிர்வாகியுமான சோனாலி போகாட்.
    • இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் தெரிவித்திருந்தார்.

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42), தனது அலுவலக உதவியாளர்களுடன் கோவா சென்றிருந்த நிலையில் கடந்த 22-ந்தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சோனாலி போகட் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் கோவா போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சக்வான், சுக் விந்தர் வாசி ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வடக்கு கோவா அஞ்சனாவில் உள்ள ரெஸ்டாரண்டில் நடந்த விருந்தில் போதை ஏற்படுத்தும் ஒரு வேதிப் பொருளை தண்ணீரில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக உதவியாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

    சோனாலி போகட்

    சோனாலி போகட்

     

    இதற்கிடையே சோனாலியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங்கை கோவா போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் சோனாலி போகட் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சோனாலி பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சி நடந்த கிளப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த கிளப்பின் கழிப்பறையில் போதை பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து அவர் கைதாகி உள்ளார். போதை பொருள் தன்மை குறித்து இன்னும் உறுதிப் படுத்தபடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

     

    சோனாலி போகட்

    சோனாலி போகட்

    அதே போல போதை பொருள் விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சுதிர் சக்வான், சுக் விந்தர் வாசி ஆகியோர் தாங்கள், அஞ்சுனா பகுதியை சேர்ந்த தத்தா பிரசாத் கோன்சர் என்பவரிடம் போதை பொருளை வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து தத்தா பிரசாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கு பின்னணியில் பணபிரச்சினை இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    • பிரபல நடிகையும், அரியானா மாநில பா.ஜனதா நிர்வாகியுமான சோனாலி போகாட்.
    • இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் தெரிவித்துள்ளார்.

    பிரபல நடிகையும், அரியானா மாநில பா.ஜனதா நிர்வாகியுமான சோனாலி போகாட் (வயது43). இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். சோனாலி தனது அலுவலக ஊழியர்களுடன் கோவாவுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த 23-ந்தேதி அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சோனாலி மருத்துவமனைக்கு வரும் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகை சோனாலி உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது.

     

    சோனாலி போகாட்

    சோனாலி போகாட்

    சோனாலியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக சோனாலியின் சகோதரர் ரிங்கு தாக்கா கோவாவில் உள்ள அன்ஜுனா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் சோனாலியின் சாவில் அவரது உதவியாளர் உள்பட 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது அவர், சுதிர்சங்வான், அவரது நண்பர் சுக்விந்தர் வாசி ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பிறகே உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

    சோனாலி போகாட்

    சோனாலி போகாட்

     

    இதையடுத்து சோனாலி யின் உதவியாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சோனாலி குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்று கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலை சோனாலி உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.

    சோனாலி போகாட்

    சோனாலி போகாட்

     

    இந்த காயங்களை கருத்தில் கொண்டு அவர் எப்படி இறந்தார் என்பதை விசாரணை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சோனாலி அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து சோனாலியின் உதவியாளர் சுதிர் சங்வான், அவரது நண்பர் சுக்விந்தர் வாசி ஆகிய 2 பேரை கோவாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    2019-ம் ஆண்டு அரியானா தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட சோனாலி, அப்போதைய காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னோவிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்படித்தக்கது.

    ×