என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்தி தொகுப்பாளினி"

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 16 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

    1980 மற்றும் 90-களில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி மிகவும் பிரபலமானவர் சரளா மகேஸ்வரி. அவரது குரல்வளம், தெளிவான உச்சரிப்பு மற்றும் செய்தி வழங்கும் முறைக்காக மக்களிடையே மிகவும் ஐக்கியமானவர்.

    கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சி காலத்திலிருந்து வண்ணத் தொலைக்காட்சி காலம் வரை தூர்தர்ஷனில் அவர் ஒரு முக்கிய முகமாக இருந்தார். செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்டவர் சரளா மகேஸ்வரி. மேற்கு வங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 16 புத்தகங்களை எழுதியுள்ளார்.

    இந்நிலையில் 71 வயதான அவர் இன்று டெல்லியில் காலமானதாக கூறப்படுகிறது.  அவரது மறைவிற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×