என் மலர்
நீங்கள் தேடியது "கார்மேனி செல்வம்"
- சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
- இப்படத்தில் லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களாக வலம் வரும் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் 'கார்மேனி செல்வம்'. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
'கார்மேனி செல்வம்' படத்தில் லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா, அர்ஜுனன், சங்கர நாராயண் வி, கோதண்டம், கரண் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.
அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு பணத்தின் மீது பேராசை ஏற்பட இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள 'கார்மேனி செல்வம்' படம் வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
- கார்மேனி செல்வம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகும் படம் கார்மேனி செல்வம்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும், கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது. வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் 'கார்மேனி செல்வம்' குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று மாலை 5.55 மணிக்கு வெளியானது.

நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கார்மேனி செல்வம் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை மியூசிக் கிளவுட் ஸ்டூடியோ & டெக்னாலஜி எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர்.






