என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிய கலப்பு பேட்மிண்டன்"
- லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
- இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வலுவான தென் கொரியாவை சந்திக்கிறது.
கியாங்டா:
ஆசிய கலப்பு அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள கியாங்டாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதன் 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் மக்காவை எதிர்கொண்டது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் மக்காவை தோற்கடித்து கால்இறுதியை உறுதி செய்தது.
சதீஷ், லக்ஷயா சென், மாள்விகா பான்சோத் ஆகியோர் ஒற்றையரிலும், சிராக் ஷெட்டி- எம்.ஆர். அர்ஜூன், திரிஷா ஜாலி- காயத்ரி ஆகிய ஜோடியினர் இரட்டையரிலும் இந்தியாவுக்கு நேர் செட்டில் வெற்றியை தேடித்தந்தனர். இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வலுவான தென் கொரியாவை சந்திக்கிறது.
- காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை எதிர் கொண்டது.
- இதில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
கியாங்டா:
ஆசிய கலப்பு அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள கியாங்டாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி லீக் சுற்றில் தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.
இதனையடுத்து இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை எதிர் கொண்டது. இதில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
கலப்பு இரட்டையர், பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் என முதல் 3 போட்டிகளிலேயே இந்திய வீரர்கள் தோல்வியை சந்தித்ததால் ஜப்பான் எளிதில் வெற்றி பெற்றது.






