என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா நிலச்சரிவு"

    • இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 9 கிராமங்கள் நாசமாகின.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் உள்ள 9 கிராமங்கள் நாசமாகின. தொடர் மழையால் மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×