என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் வடிவேலு"

    • சிறியவர்கள், பெரியவர்கள் என்று கூட பார்க்காமல் தாறு மாறாக பேசுகிறார்கள்.
    • பத்து பேர் சேர்ந்து சினிமாவையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சென்னையில் இன்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியதாவது:-

    நமக்குள் கொஞ்சம் ஒற்றுமை குறைவாக உள்ளது. அனைவரிடமும் ஒற்றுமை வரவேண்டும்.

    சமூக வலைதளங்களில் திரை உலகினரை பற்றி சிறியவர்கள், பெரியவர்கள் என்று கூட பார்க்காமல் தாறு மாறாக பேசுகிறார்கள்.

    நம்ம ஆட்களிலேயே சில பேர் அவர்களுக்கு துணை போகிறார்கள். பத்து பேர் சேர்ந்து சினிமாவையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தவறாக பேசுபவர்களுக்கு 'ஆப்பு' வைக்க வேண்டும். நம்மை தூங்க விடாமல் ஆக்கும் அவர்களை தூங்கவிடாமல் செய்து நாம் நிம்மதியாக தூங்க வேண்டும். அவதூறு கருத்துக்களை பரபரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எனக்கு பிடித்த நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேசும் ஒருவர்.
    • நாங்கள் இருவரும் இணைந்து நடித்த போது அவர் கொடுத்த ஆலோசனைகள் மறக்க முடியாது.

    மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வடிவேலு கூறியதாவது:-

    எனக்கு பிடித்த நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேசும் ஒருவர். அவரது யதார்த்த நடிப்பையும் அன்பையும் இப்போது நான் இழந்து நிற்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த போது அவர் கொடுத்த ஆலோசனைகள் மறக்க முடியாது.

    அப்படி அவர் சொன்ன சம்பவத்தை வைத்து தான் 'நேசம் புதுசு' படத்தில் 'பொண்ண கையப்பிடிச்சி இழுத்தியா' என்ற நகைச்சுவை காட்சி உருவானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×