என் மலர்
நீங்கள் தேடியது "ராணிப்பேட்டை சாலை விரிவாக்கம் பணி"
- மழை பெய்யும் போது சாலை சந்திப்புகளில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மட்ட விளக்குகள் எரிவதில்லை.
- கடந்த 5 ஆண்டுகளில் இந்த நெடுஞ்சாலையில் 520-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேலூர்:
ராணிப்பேட்டை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிப்காட் வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் வரை சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் சென்னையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் ஆரணி, காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஆந்திரா வழியாக எளிதில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்ல முடியும்.
இதனை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டை- சித்தூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 18-வது முறையாக டெண்டர் விடும் பணியை நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் சாலை விரிவாக்க பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் சென்னை துறைமுகத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் செல்வதில் முக்கிய வழித்தடமாக இருக்கும். இதனை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் வேலூர் கிருஷ்ணகிரி வழித்தடத்தில் தற்போது நடந்து வரும் சாலை விரிவாக்க பணிகளும் நிலுவையில் உள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ராணிப்பேட்டை இடையான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்டும்பணி நடந்து வருகிறது. போதிய தடுப்புகள் மற்றும் பிரதிபலிப்பு விளக்குகள் இல்லாமல் வாகனங்கள் அடிக்கடி பிரேக் போடும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
மழை பெய்யும் போது சாலை சந்திப்புகளில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மட்ட விளக்குகள் எரிவதில்லை. இதனால் மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த நெடுஞ்சாலையில் 520-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் சென்னை-பெங்களூரு செல்லும் லாரி டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை வாலாஜா சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டு அதுவும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதிய திட்டம் வகுக்கும் வரை இந்த சாலை 4 வழிச்சாலையாகவே செயல்படும் என தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டிகளிடம் தேசிய நெடுஞ்சாலை துறை கோடிக்கணக்கில் பணம் வசூலித்து வருகிறது. ஆனால் சாலை பணிகளை முறையாக செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது.
சென்னை-பெங்களூரு இடையே சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் சாலை பணிகள் அரசின் ஒப்புதல் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது அலட்சியப் போக்கை காட்டுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.






