என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் வேணுகோபாலசாமி கோவில்"

    • ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும் மற்றும் துவார பாலகர்கள், விநாயகர், முருகர் ஆகிய புதிய சிலை வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
    • சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணா ஹுதியும் தீபாராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஓ.பி.கே. புது தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோபால சுவாமி ஆலயம் புதிதாய் நிர்மாணிக்கப்பட்டு ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும் மற்றும் துவார பாலகர்கள், விநாயகர், முருகர் ஆகிய புதிய சிலை வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணா ஹுதியும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று மூலவர் விமானம் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன், உப தலைவர்கள் தீனதயாளன், ராமு, செயலாளர் தயாளன், துணைச் செயலாளர்கள், கருணாமூர்த்தி, வரதன், திருவேங்கடம், பொருளாளர் துரை.கணேசன் மற்றும் அப்பகுதி வாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இதில் தேவராஜ் பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.

    ஆலய நிர்வாக பணியினை நந்தகோபால் ஸ்பதி சிறப்பாக செய்திருந்தார். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதில் 16-வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சாந்தி துரைராஜன், கண்ணன், சப்தகிரி, காஞ்சி காமராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேணுகோபாலின் பேரருளை பெற்று சென்றனர்.

    ×