என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக பக்கவாத தினம்"

    • பக்கவாதம் ஒரு மனிதனை முழுமையாக முடங்கிப்போகச் செய்யும் மிகவும் ஆபத்தான ஒரு நோய்.
    • வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

    மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் முக்கியமானது பக்கவாதம். ஒரு மனிதனை செயல்பட விடாமல் ஓரிடத்தில் முடக்கிப்போடும் அபாயகரமான நோயில் இதுவும் ஒன்று.

    பக்கவாத அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவசர மருத்துவ சிகிச்சையை சரியான நேரத்தில் அணுகுவதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தவும் அக்டோபர் 29-ம் தேதி உலக பக்கவாதம் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் இந்த பக்கவாத நோய் ஏற்படுகிறது.

    உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்காமல் இருப்பது, நீரிழிவு தொடர்ந்து அதிகரிப்பது, இதய நோய், இதய செயலிழப்பு, இதயத்துடிப்பு கோளாறு, அதிக கொழுப்பு, ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பது, அதிக புகை மற்றும் மது பழக்கம், மன அழுத்தம், அதிக உடல் எடை, உடல் உழைப்பின்மை போன்ற காரணிகளாலும், பக்கவாதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

     

    வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் மில்லியன் கணக்கான உயிர்களை அச்சுறுத்தும் நோயாக இது மாறியுள்ளது.

    நாட்டில் இறப்புக்கான முதல் இதய நோய், டயரியா, பக்கவாதம், காசநோய் உள்ளிட்ட 10 காரணங்களில் இதுவும் இடம் பெற்றுள்ளது.

    இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கினாலும், 50 வயது கடந்தவர்களையே அதிகமாக பாதிக்கிறது.

    பக்கவாதம் ஒரு மனிதனை முழுமையாக முடங்கிப்போகச் செய்யும் மிகவும் ஆபத்தான ஒரு நோய். இப்போது பக்கவாதம் வந்தவர்கள் பல்வேறு பயிற்சிகளுக்கு பிறகு இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறது.

    மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் கொடுத்து பக்கவாதத்துக்கு சிகிச்சை அளித்து நோயாளிக்கு ஏற்பட இருக்கும் அடுத்தகட்ட பாதிப்பை தடுத்து விடுகின்றனர். அந்த பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வர பிசியோதெரபிஸ்ட் பயிற்சி அளிக்கின்றார். அவர்களுக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி பயிற்சியே நல்ல முன்னேற்றம் அளிக்கும்.

    புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை பக்கவாத நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.

    மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் உணவு ஆலோசகர் என அனைவரும் கைகோர்த்து சிகிச்சை அளித்தால் பக்கவாத நோயாளி அந்த பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டுவிடுவார்.

    ×