என் மலர்
நீங்கள் தேடியது "டிஷ்வாஷர்"
- வாஷிங்மெஷினை போல, தண்ணீரை சூடாக்கி, பாய்ச்சி அடித்து பாத்திரங்களை ஊறவைக்கும்.
- நம் ஊரில் பயன்படுத்தப்படும் பாத்திர வகைகளை கவனத்தில் கொண்டும், டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன.
நம் வீடுகளில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி., மைக்ரோவேவ் ஓவன்... போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள் இருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்பயன்படும் டிஷ்வாஷர் வாங்கலாமா..? வேண்டாமா...? என்பது மட்டும் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும். ஏனெனில், டிஷ்வாஷர் சுத்தமாக பாத்திரங்களை கழுவி கொடுக்குமா..? என்ற சந்தேகத்தில், டிஷ்வாஷரை மட்டும் வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருப்பார்கள். உண்மையில், இப்போது சந்தையில் இருக்கும் டிஷ்வாஷர்கள் நன்றாகவே சுத்தப்படுத்தி கொடுக்கின்றன.
* இந்திய உணவுகள்
ஆரம்பத்தில் மேலை நாடுகளின் உணவு வகைகள், உணவு பாத்திரங்கள், சமையல் முறைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஷ்வாஷர்கள்தான், சந்தையில் விற்பனையாகின. ஆனால் இப்போது இந்திய மக்களுக்காகவே பிரத்யேகமாக டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, நம்ம ஊரு சமையல் முறைகளுக்கு ஏற்பவும், நம் ஊரில் பயன்படுத்தப்படும் பாத்திர வகைகளை கவனத்தில் கொண்டும், டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன. கூடுதலாக, சுத்தப்படுத்தும் புரோகிராம்களும் இந்தியர்களுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதால், எண்ணெய் பிசு பிசுப்பு, பாத்திரத்துடன் ஒட்டியிருக்கும் விடாப்பிடியான உணவுகள் வரை எல்லாவற்றையும் சுத்தமாக நீக்கிவிடுகிறது.

* எப்படி சுத்தமாக்கும்?
வாஷிங்மெஷினை போல, தண்ணீரை சூடாக்கி, பாய்ச்சி அடித்து பாத்திரங்களை ஊறவைக்கும். கூடுதலாக, வாஷிங்மெஷினில் பயன்படும் டிடர்ஜெண்ட் பொடி அல்லது திரவங்களை போல பாத்திரங்களை சுத்தமாக்கும் திரவங்கள், மாத்திரை போன்றவற்றை நிரப்பினால், அவை பாத்திரங்களை சுத்தமாக கழுவி கொடுக்கும். தண்ணீரை பீய்ச்சி கழுவிக்கொடுப்பதுடன், பாத்திரங்களை 90 சதவிகிதம் தண்ணீர் இல்லாமல் உலர்த்தி கொடுக்கும் வேலையையும், டிஷ்வாஷர்கள் செய்கின்றன.
* டிஷ்வாஷர் அளவு
6 கிலோ, 7 கிலோ, 8 கிலோ... என வாஷிங்மெஷின்களின் துவைக்கும் அளவை குறிப்பதுபோல, டிஷ்வாஷர்களை 'பிளேஸ் செட்டிங்' கணக்கில் குறிப்பிடுகிறார்கள். அதாவது 8 பிளேஸ் செட்டிங், 13 பிளேஸ் செட்டிங்... என பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, பிளேஸ் செட்டிங் கணக்கும் அதிகமாகும். அதனால், உங்களின் குடும்ப தேவைக்கு ஏற்ற பிளேஸ் செட்டிங் டிஷ்வாஷர்களை வாங்குவது நல்லது. முடிந்தவரை, இந்தியர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஷ்வாஷர்களை தேர்ந்தெடுங்கள். ரூ.15 ஆயிரம் தொடங்கி, டிஷ்வாஷர்களை வாங்கலாம்.
- ஏழ்மையான பின்னணியில் இருந்து முன்னுக்கு வந்தவர்.
- வீட்டு பராமரிப்பு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
தனக்கு தெரிந்த கைத்தொழிலை ஏழை-எளிய பெண்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களது வாழ்க்கையிலும் ஒளி ஏற்றுகிறார், கலைச்செல்வி. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவரான இவர், ஏழ்மையான பின்னணியில் இருந்து முன்னுக்கு வந்தவர்.
வீட்டைச் சுத்தமாக, சுகாதாரமாகப் பராமரிக்கும் `ஹவுஸ் கீப்பிங்' பொருட்களை தயாரிக்க கற்றுக்கொண்டு, அதை தொழிலாக முன்னெடுத்து இன்று அரசு அலுவலகங்கள் வரை கொண்டு சேர்த்திருக்கிறார். மேலும், தனக்கு தெரிந்த இந்த கைத்தொழிலை, மற்றவர்களுக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்கிறார். கடந்த 34 வருடங்களாக, தொடர்ந்து வரும் இந்த சேவை பற்றி, கலைச்செல்வி பகிர்ந்து கொண்டவை...
`இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த நாட்டில், வீட்டுப் பராமரிப்பு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுதான், இன்று பல பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வருகிறது. நானும், அப்படித்தான் வீட்டுப்பராமரிப்பு பொருள் தயாரிப்பைக் கற்றுக்கொண்டேன். சின்ன முதலீட்டில் நல்ல லாபம் தரக்கூடியதாக இருந்ததால், இன்று வரை தொடர்கிறேன்'' என்றவர்,சிறுதொழிலாக முன்னெடுத்து இன்று, அரசு அலுவலகங்களுக்காக `ஹவுஸ் கீப்பிங்' பொருட்களை தயாரித்து வழங்கும் அளவிற்கு, முன்னேறி இருக்கிறார்.
`ஏழை-எளிய பெண்களின் வாழ்க்கை முன்னேற, சிறுதொழில் மிகவும் அவசியம். அதுவும் வீட்டுப் பராமரிப்பு பொருள் தயாரிப்பு சம்பந்தமானதாக இருந்தால், பெரியளவில் முன்னேற்றம் இருக்கும். என் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக அதை உணர்ந்து கொண்டேன். இப்போது, அதை மற்ற ஏழைப் பெண்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன்' என்றவர், இதுவரை சென்னையை சுற்றியிருக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச பயிற்சி வழங்கி, அவர்களை சிறுதொழில் முனைவோர்களாக மாற்றியிருக்கிறார். சிறிய முதலீட்டிற்குக் கூட வசதியில்லாதவர்களுக்கு, தன்னால் முடிந்த தொழில் வளர்ச்சி முயற்சிகளை முன்னெடுக்கிறார்.
`நான் சுயமாகவே பயிற்சி கொடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும், பெண்கள் குழுக்களுடன் இணைந்து, 2 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறேன். பொதுவாக, வீட்டுப்பராமரிப்பு பொருட்களை தயாரிக்க, வெறும் 2 நாட்கள் பயிற்சியே போதுமானது. 2 நாட்கள் பயிற்சியிலேயே, ரூம் பிரஷ்னர், லிக்வீட் டிடெர்ஜெண்ட், டிடெர்ஜெண்ட் பவுடர், பினாயில், டிஷ்வாஷர், சானிடைஷர்... இப்படியாக 10 பொருட்களைத் தயாரிக்க கற்றுக்கொள்ளலாம். அது பல குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்' என்பவர், தொழில்முனைவோர் வளர்ச்சி பணிகளுக்காக பல விருதுகளை பெற்றிருக்கிறார். சமீபத்தில் கூட, இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
`பெண்களின் ஏழ்மை, அவர்களை தொழிலாளர்களாக மாற்றிவிடுகிறது. சிலர் அடுக்குமாடிகளில் வீட்டு வேலை செய்கிறார்கள். சிலர் ரசாயன நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்கள். இந்த நிலையை மாற்றி, ஏழை பெண்களையும் சுய தொழில் செய்யும் தொழில்முனைவோராக மாற்றுவதுதான் என் ஆசை. அந்த பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்' என்கிறார்.






