என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்மலிங்கம் சித்தார்த்தன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கச்சத்தீவை ஆரம்ப காலங்களில் இந்தியா வைத்திருந்தது.
    • சித்தார்த்தனின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்கள் கடந்து பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    கச்சத்தீவு இலங்கையிடம் இருக்கிறதா அல்லது இந்தியாவிற்கு கொடுப்பதா என்று இரண்டு நாடுகளும் தெளிவாக ஆராய வேண்டும் என தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், இலங்கையின் முன்னாள் எம்.பி.யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், கச்சத்தீவை ஆரம்ப காலங்களில் இந்தியா வைத்திருந்தது. பின்னர் இலங்கைக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஒவ்வொரு முறையும் இலங்கை இந்தியாவிற்கு கொடுப்பதும், இந்தியா இலங்கைக்கு கொடுப்பதுமாக இல்லாமல், ஒரு நிரந்தரமான நிரந்தர முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்றார்.

    இலங்கையின் முன்னாள் எம்.பி தர்மலிங்கம் சித்தார்த்தனின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்கள் கடந்து பொது மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ×