என் மலர்
நீங்கள் தேடியது "வீரப்பிரம்மேந்திர சுவாமிகள் காலக்ஞான நூல்"
- ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் இளமையிலேயே ஞானம் கைவரப் பெற்று பஞ்சகர்மாக்களை உபதேசம் செய்தார்.
- மாதா-பிதா மனம் நோகாது அவர்கள் வாழும் வரை பேணி பாதுகாத்து அவர்களுக்கும் இவ்வையகத்திற்கும் புகழ் சேர்ப்பது.
கி.பி. 1604-ம் ஆண்டு விஜய நகர சாம்ராஜ்யத்திற்கு பின் ஆந்திரப் பிரதேசத்தில் பிரம்மஸ்ரீ பரிபூரணாச்சாரியாரின் பிரக்குராம்பா தம்பதியர்கள் செய்த தவப்பயனால் ஈன்றெடுத்த தவப் புதல்வர் ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர்.
கர்நாடக மாநிலத்தில் நந்தி கொண்டா என்ற கிராமத்தில் ஸ்ரீவீரபோஜாச்சாரியார் வீரபாப்பம்மாள் தம்பதியரால் வளர்க்கப்பட்டவர் `ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவர்' இளமையிலேயே ஞானம் கைவரப் பெற்று பஞ்சகர்மாக்களை உபதேசம் செய்தார்.
மாதா-பிதா மனம் நோகாது அவர்கள் வாழும் வரை பேணி பாதுகாத்து அவர்களுக்கும் இவ்வையகத்திற்கும் புகழ் சேர்ப்பது.
இறை வழிபாடு- தெய்வ சிந்தனையின் காரணத்தால் பாப காரியங்களினின்றும் விடுபட்டு அன்பும் அறமும் அருளோடு பெற்று வாழ்வது.
பிற உயிர்களை கொல்லாமல் (ஜீவ ஹிம்சை) கொல்லாமையை கடைப்பிடிப்பது.
பித்ரு கடன் இறைவனடி சேர்ந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபடல்.
பசித்தவர்களுக்கு பசி நீக்குதல் அன்னம் பாலிப்பு.
இவை ஐந்தும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டுமென்று எடுத்துக்கூறினார்.
சென்னை வருகை
1629-ம் ஆண்டில் சென்னை மாநகரம் வந்தார். சென்னை மாநகரில் சூளை அவதான பாப்பையர் வீதியில் தங்கிருந்த வீரசுப்பையா சுவாமிகள் தன் தத்துவ யோக விளக்கத்தால் மக்களை கவர்ந்தார். கந்தசாமி பிள்ளை, சிவப்பிரகாசம் பிள்ளை இருவரும் சுவாமிகளிடம் அருட்தீட்சைப் பெற்று வீர கந்தையா என்றும் வீர சுப்பையா என்றும் குருவின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டனர்.
சூளை பகுதியில் ஒரு மடம் வீர சுப்பையா மடமும், வியாசர்பாடியில் வீரகரப்பாத்திர வீரய்யா சுவாமிகளும் சமாதி அடைந்துள்ளனர். இன்றும் அம்மடங்கள் உள்ளன.
ஸ்ரீவிராட் போத்தலூரி வீரப்பிரம்மேந்திரர் சுவாமிகள் அருளிய காலக்ஞான நூல் உலகம் வாழ வழிகாட்டியாக உள்ளது. ஜீவன் முக்தராக இன்றும் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.






